Wednesday, December 23, 2009

திருக்காரவாசல் மரகதலிங்கம் மீண்டும் கோயிலில்!!



மிக்க மகிழ்ச்சி உடன் உங்களிடம் இந்த இனிப்பான செய்தியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் அருள்மிகு தியாகராஜா சுவாமி திருக்கோயிலில் 1992 -இம் ஆண்டில் திருடப்பட்ட மரகத லிங்கத்தை 17 ஆண்டுகளுக்குப் பிறகு போலீசார் கண்டுபிடித்து கோயில் இடம் ஒப்படைத்தனர். இந்த மரகத லிங்கம் மிகவும் அறியதானது. நாட்டிலே ஏழு சப்த விடங்களில் மட்டுமே உள்ளது.

17 ஆண்டுகளுக்கு பிறகு திரும்பயுள்ள மரகத லிங்கதால் திருகாரவாசலுக்கு நல்லது நடக்க எல்லாம் வல்ல இறைவனை வணங்குகிறேன்.

Thursday, July 30, 2009

திருக்காரவாசல் - குரு பகவான் மற்றும் மாரியம்மன்

திருக்காரவாசலில் காட்சி தரும் குரு பகவான், ஞான மகாகுரு. அவர், தலையில் குண்டலினி சக்தியுடன் காட்சியளிப்பது அபூர்வமான ஒன்று. ஞான மகாகுரு எதிரில் அகத்தியர் சுவடி படிக்கும் காட்சி அமைந்திருக்கிறது. அதனால் நாடி ஜோதிடம் துவங்கிய கோயில் இதுதானோ என்று தோன்றுகிறது.

பொதுவாக சிவன் கோயிலில் மாரியம்மன் இருக்க மாட்டார். ஆனால் இங்கே மாரியம்மன் அழகுற காட்சி தருகிறாள். இவளுக்கு அபிஷேகம் செய்தால் அம்மை போன்ற நோய்கள் வராது என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Friday, July 3, 2009

திருக்காரவாசல் - கடுக்காய் விநாயகர்

ஒரு வணிகன், ஜாதிக்காய் மூட்டைகளுடன் வண்டியில் இந்தப் பக்கம் வந்தான். இரவு இந்தக் திருக்குளம் கரையில் தங்கினான். அப்போது ஒரு சிறுவன், "வண்டியில் என்ன?" என்று கேட்க, "கடுக்காய்" என்று பொய் சொன்னான் வணிகன்.

மறுநாள் காலையில் பார்த்தால் ஜாதிக்க்காயகள் எல்லாம் கடுக்காய்களாக மாறி இருந்துன. சிறுவனாக வந்தவர் விநாயகர்தான் என்பதை உணர்ந்த வியாபாரி, தன் தவறுக்கு வருந்த, மீண்டும் ஜாதிக்காயகளாக மாறின. ஆனால் பிள்ளையார் மட்டும் 'கடுக்காய் விநாயகர்' ஆகிவிட்டார்.

Wednesday, July 1, 2009

திருக்காரவாசல் தீர்த்தங்கள்

முதலாம் ராஜராஜன் மற்றும் ராஜேந்திர சோழன் காலத்தில் திருப்பணி செய்யப் பட்ட இந்தக் கோயிலில் இரண்டு தீர்த்தங்கள் உள்ளன. ஆதிசேஷனால் உருவாக்கப்பட்ட 'சேஷ தீர்த்தம்' என்னும் கிணற்று நீர், மருத்துவ குணம் மிக்கது. ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் அம்பிகைக்கு அந்த நீர் அபிஷேகம் செய்யப்பட்டு வேண்டுவோர்க்கு அளிக்கப் படும். இன்னொரு தீர்த்தம் பிரம்மா தீர்த்தம் என்னும் திருக்குளம். இதன் கரையில் கடுக்காய் விநாயகர் சன்னதி உள்ளது. அதை பற்றி அடுத்த இதழில் காண்போம்.

Sunday, June 28, 2009

திருக்காரவாசலில் தியாகராஜர்

கண்ணாயிரநாதருக்குச் சமமாக, பக்கத்திலேயே ஆதிவிடங்க தியாகராஜரின் சன்னதி அமைந்திருக்கிறது. தேவேந்திரனால் உருவாக்கப்பட்டவர் இந்த தியாகராஜர்.

இந்த திருக்காரவாசலில் தியாகராஜர் வீர சிங்காதனத்தில் குக்குட நடனக் காட்சியுடன் அருள்புரிகிறார். திருவாரூரில் வீதிவிடங்க தியாகேசரின் அஜபா நடனத்தைக் கண்டுகளித்த பதஞ்சலி முனிவர், எல்லா வகை நடனங்களையும் தனக்குக் காட்டி அருளிய வேண்டுமென்று இறைவனிடம் வேண்டினார். "திருக்காறாயில் வந்தால் காணலாம்" என்று தியாகராஜர் ஆணை இட்டு, ஆடிக் காட்டிய தலம்தான் இந்த திருக்காரவாசல்.

Thursday, June 25, 2009

திருஞானசம்பந்தரால் பாடி அருளிய ஸ்தலம் - திருக்காரவாசல்


'பிறையானே பேணிய

பாடலொடின்னிசை

மறையானே மாலோடு நான்

முகன் காணாத

இறையானே யெழில் திகழும்

திருக்காறாயில்

உறைவானே யென்பவர் மேல்

வினையோடுமே'

என்று இந்த இறைவனைப் பற்றிப் பாடுகிறார் திருஞானசம்பதர்.

Wednesday, June 24, 2009

கண்ணாயிரநாதர் - பெயர் காரணம் மற்றும் சிறப்பு

பிரம்மாவிற்கு, 'தான்தான் எல்லாம்' என்று ஒரு முறை கர்வம் வந்தது. சிவப்பெருமானைக் கூட வழிபடாமல் இருந்தார். அவ்வளவுதான். அவரது பதவி பறிபோய், நட்டாற்றில் நின்றார். பின்னர் விஷ்ணுவின் உபதேசத்தால், காரை மரங்கள் நிறைந்திருந்த திருக்காறாயில் (திருகாரவாசல்) வந்து இறைவனை நினைத்து ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்தார். சிவபெருமான், ஆயிரம் கண்களுடன் அவருக்குக் காட்சி தந்தார். எனவே கண்ணாயிரநாதர் என பெயர் பெற்றார்.

திருக்காரவாசல் வந்து இந்த கண்ணாயிரநாதர் ஐ வழிப்பட்டால், ஆயிரம் கண்கள் உடைய இந்த ஈசன் உங்கள் கண்களை நிச்சயம் குனபடுத்துவார்.